மனம் இனிக்குதே
ஞாயிறு
கணேஷ் அவனுடைய நண்பனின் திருமணத்துக்கு சென்றான் கல்யாணம் முடிந்து பந்தியில் அமர்ந்தவனுக்கு பக்கத்தில் ஓரு நடுத்தர வயதுக்காரர் சாப்பிட்டு முடித்த கணேஷ் இலையை மடிக்க போன கணேஷன் கையை பிடித்தார் என்ன என்று கேட்க்க தம்பி இலையை உள்ளார மடிங்க ஏன் என்று பார்வையால் கேள்வி கேட்டான் உள்ளார மடிச்சா ஆவா உறவு வேணும்னு அர்த்தம் அப்ப வெளிய மடிச்சா ஆவா உறவு வேண்டாம்னு அர்த்தம் அப்படிங்களா
அப்ப இப்படி மடிச்சு கையில் எடுத்தா? நீ ரொம்ப நல்லவன்னு அர்த்தம் சரிங்க மடித்த இலையை இரண்டு பேரும் ஒன்றாக கொண்டு சென்றார்கள் அந்த மனிதர் இலையை குப்பை தொட்டியில் போட்டார் தம்பி குப்பைதொட்டி இங்கே இருக்குபா என்று குரல் கொடுத்தார்
காதில் வாங்காமல் கணேஷ் கல்யாண வீட்டின் வாசல்வரை வந்து அங்கு இலைகளுக்கு காத்து இருக்கும் பிள்ளைதாட்ச்சியான குருவிகாரிக்கு தான் இரண்டு முறை வாங்கிய பதார்தங்களை இலையை அவளது டால்டா டப்பாவில் போட்டான்பும்பிடறேன் சாமி என்று கைகுப்பித்தாள்.
கணேஷ் அந்த மனிதரை திரும்பி பார்த்து சார் இப்ப என்ன ரொம்ப நல்வன்னு சொல்வாங்கல்ல ? இன்று கணேஷுக்கு இனிப்பு சாப்பிட்டதால் முதல் முறையாக இதயம் இனித்த்து
0 comments:
கருத்துரையிடுக